சீர்காழி தாடாளன் பெருமாள் கோயிலில் உதய கருடசேவை புதன்கிழமை நடைபெற்றது.
108 திவ்ய தேசங்களில் ஒன்றான இக்கோயிலில் பெருமாள் லோகநாயகி தாயாருடன் காட்சி தருகிறார். இங்கு ஆண்டுதோறும் ஆவணி மாதம் நடைபெறும் பவித்ரோற்ஸவம் கடந்த 2-ஆம் தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக 5-ஆம் நாளான புதன்கிழமை உதயகருடசேவை நடந்தது. முன்னதாக, பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. தொடர்ந்து திருஆபரணங்கள், மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தங்க கருட வாகனத்தில் பெருமாள் வீதியுலா மற்றும் தீர்த்தவாரி, சாத்துமுறை வழிபாடுகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம்செய்தனர். ஏற்பாடுகளை கே.கே.சி. ஸ்ரீனிவாச்சாரியார் செய்திருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.