நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்

நாகை புதிய பேருந்து நிலையத்தில் மாணவர் இந்தியா  சார்பில், நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
Published on
Updated on
1 min read

நாகை புதிய பேருந்து நிலையத்தில் மாணவர் இந்தியா  சார்பில், நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு  அதன் மாவட்டச் செயலாளர் அப்துர் ரஹ்மான் தலைமை வகித்தார். இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில விவசாயிகள் அணிச் செயலர் நாகை முபாரக், நாகை தெற்கு மாவட்டச் செயலர் செய்யது ரியாசுதீன், மாநில செயற்குழு உறுப்பினர் பாவா பகுருதீன், மாவட்ட பொருளாளர் சுல்தான் சற்குரு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், அனிதாவின் மரணத்துக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com