வேதாரண்யத்தை அடுத்த மருதூர் கிராமத்தில் வடக்கு அரசு உயர்நிலைப் பள்ளியில் சுற்றுச் சூழல் விழிப்புணர்வுப் பேரணி வியாழக்கிழமை
நடைபெற்றது.
மருதூர் ரோட்டரி சங்கம், மருதூர் வடக்கு அரசு உயர்நிலைப் பள்ளி இணைந்து நடத்திய சுற்றுச் சூழல் விழிப்புணர்வு பேரணிக்கு தலைமையாசிரியர் டி.ராமலிங்கம் தலைமை வகித்தார். ரோட்டரி சங்கத் தலைவர் வி.சண்முகம் முன்னிலை வகித்தார்.பேரணியை ஊராட்சி முன்னாள் தலைவர் பாலசுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். பள்ளி வளாகத்தில் மரக் கன்றுகள் நடப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.