மயிலாடுதுறையில் தீத்தொண்டு வார விழா

மயிலாடுதுறை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் சார்பில் தீத்தொண்டு வார விழா சனிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

மயிலாடுதுறை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் சார்பில் தீத்தொண்டு வார விழா சனிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
 பணியின்போது உயிர் நீத்த தீயணைப்புத்துறை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ஆண்டுதோறும் ஏப்-14 முதல் 20-ஆம் தேதி வரை தீத்தொண்டு வார விழாவாக தீயணைப்புத் துறையினரால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. மேலும், தீத்தொண்டு வார விழா நாளில் அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் ஆகிய இடங்களில் தீத்தடுப்பு முறைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
இந்த நிலையில், தீத்தொண்டு வார விழாவின் முதல் நாளான சனிக்கிழமை மயிலாடுதுறை தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை அலுவலக வளாகத்தில், பணியின்போது உயிர்நீத்த வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. நிலைய அலுவலர் ஏ. அன்பழகன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தீயணைப்புத் துறை வீரர்கள் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com