மதுபுட்டிகளை கடத்தியவர் கைது

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே புதுச்சேரி சாராயம் உள்ளிட்ட மது புட்டிகளைக் கடத்திச் சென்ற ஒருவரை திங்கள்கிழமை போலீஸார் கைது  செய்தனர்.

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே புதுச்சேரி சாராயம் உள்ளிட்ட மது புட்டிகளைக் கடத்திச் சென்ற ஒருவரை திங்கள்கிழமை போலீஸார் கைது  செய்தனர்.
அகஸ்தியம்பள்ளி சோதனைச் சாவடிப் பகுதியில் போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த கோடியக்காடு கிராமத்தைச் சேர்ந்த ப. தேவராஜன் (35) புதுச்சேரி சாராய புட்டிகள்-25, தமிழக மது புட்டிகள்- 100 ஆகியவற்றை கடத்திச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, மதுபுட்டிகளைப் பறிமுதல் செய்த போலீஸார், அவரை கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com