அறநிலையத் துறை இடங்களை அளவிடும் பணி தொடக்கம்

நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளில் உள்ள அறநிலையத் துறைக்குச் சொந்தமான இடங்களை அளவிடும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளில் உள்ள அறநிலையத் துறைக்குச் சொந்தமான இடங்களை அளவிடும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
சென்னை, உயர்நீதிமன்ற மதுரை கிளை, தமிழகத்தில் உள்ள அறநிலையத் துறைக்குச் சொந்தமான நிலங்களை அளவீடு செய்ய அண்மையில் உத்தரவிட்டது. இதன்படி, நாகை வட்டத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமானதாக உள்ள நிலம் மற்றும் வீட்டுமனைகளின் பரப்புகளை அளவிடும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
நாகை, இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் எஸ்.எஸ். பாலசுப்பிரமணியன், ஓய்வு பெற்ற நில அளவையாளர் எஸ். சண்முகம், திருக்கோயில் செயல் அலுவலர் மு. பூமிநாதன் ஆகியோர் முன்னிலையில், திருக்கோயில் பணியாளர்கள் நில அளவீடு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com