தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வட்டார மாநாடு, குத்தாலத்தில் அண்மையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு வட்டாரத் தலைவர் இரா. முருகன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் மு. லெட்சுமிநாராயணன், பொதுக்குழு உறுப்பினர்கள் சு. வேம்பு, செüந்தரபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டாரச் செயலாளர் சி. ரவிச்சந்திரன் வரவேற்றார்.
இதில் மாநில பொதுச் செயலாளர் ந. ரங்கராஜன் கலந்துகொண்டு பேசினார். வட்டார நிர்வாகிகள் சுப்பிரமணியன், ராஜபிரகாஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். வட்டார துணைத் தலைவர் சங்கரன் நன்றி கூறினார்.