ரெப்கோ வங்கி கிளை ஆண்டு விழா

நாகை ரெப்கோ வங்கி கிளையில், வங்கியின் 50-ஆவது ஆண்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

நாகை ரெப்கோ வங்கி கிளையில், வங்கியின் 50-ஆவது ஆண்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, வங்கி கிளை முதன்மை மேலாளர் வை. முத்து தலைமை வகித்து அவர் பேசியது: மத்திய அரசு நிறுவனமான ரெப்கோ வங்கி சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு, தென்னிந்தியாவில் 108 கிளைகளுடன் வாடிக்கையாளர்களுக்கு சேவை அளித்து வருகிறது. கடந்த செப்டம்பர் மாதத்துடன் ரூ. 14 ஆயிரம் கோடி வணிகத்தை எட்டியுள்ளது. 1869-இல் தொடங்கப்பட்ட இவ்வங்கி நிகழாண்டில், பொன்விழாவைக் கொண்டாடி வருகிறது. மூத்த குடிமக்களுக்கான 1 வருட முதலீடு திட்டத்துக்கு 8.20 சதவீத வட்டியும், வாடிக்கையாளர்களுக்கு 7.70 சதவீத வட்டியும் வழங்கப்படுகிறது. தொழில் செய்வோர்களுக்கு  ரூ.5 லட்சம் முதல் 1 கோடி  வரை கடன் வழங்கப்படுகிறது. இந்த சேவைகளை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது என்றார். 
வங்கி கிளை உதவி மேலாளர் அருள்மொழித்தேவன், அலுவல ர் வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com