நாகை மாவட்டம், சீர்காழி அருகேயுள்ள திருபுவனவீரமங்கலம் கிராமத்தில், காரைக்கால் ஜவாஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவிகளின் சார்பில், வேளாண் கண்காட்சி மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
கொள்ளிடத்தை அடுத்த திருபுவனவீரமங்கலம் கிராமத்தில், காரைக்கால் ஜவாஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மாணவிகள், குழுத்தலைவி யோகலெட்சுமி தலைமையில், கடந்த 3 மாதமாக தங்கியிருந்து, ஆய்வுப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் நிறைவாக, விவசாயிகளிடம் தாங்கள் கற்று அறிந்தவற்றையும், இயற்கை முறை உரங்களின் செயல்முறை விளக்கம் குறித்தும் கண்காட்சியில் இடம்பெறச் செய்தனர்.
பின்னர், பேராசிரியர்கள் ராமநாதன், பார்த்தசாரதி ஆகியோர் முன்னிலையில், கிராமத்தின் பல்வேறு பகுதிகளில் மாணவிகள் மரக்கன்றுகளை நட்டனர்.