நாகை, திருவாரூர் மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகள், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் ஒப்புதல் பெற விண்ணப்பிக்கலாம் என, நாகை மாவட்ட ஆட்சியர் சீ.சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நீர் மற்றும் காற்று மாசுக் கட்டுப்பாடு சட்டத்தின் கீழ், தொழிற்சாலைகளுக்கு, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் ஒப்புதல் வழங்கவுள்ளது. ஆகையால் நாகை, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகள் உரிய ஆவணங்களை, இணையதளம் வாயிலாக சமர்ப்பித்து, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் ஒப்புதலைப் பெற்றும், புதுப்பித்தும் பயனடையலாம்.
மாசுக் கட்டுப்பாடு வாரிய ஒப்புதல் பெறாத தொழிற்சாலைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.