சாரண, சாரணிய ஆசிரியர்கள் சிறப்புக் கூட்டம்

நாகை வருவாய் மாவட்ட சாரண, சாரணிய ஆசிரியர்களுக்கான சிறப்புக் கூட்டம், சீர்காழியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

நாகை வருவாய் மாவட்ட சாரண, சாரணிய ஆசிரியர்களுக்கான சிறப்புக் கூட்டம், சீர்காழியில் திங்கள்கிழமை நடைபெற்றது.
சீர்காழி ச.மு.இ. மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கூட்டத்துக்கு சீர்காழி கல்வி மாவட்ட அலுவலர் ஆ.தியாகராஜன் தலைமை வகித்தார். சீர்காழி வட்டார கல்வி அலுவலர்கள் பூவராகவன், லெட்சுமி, சாரண, சாரணிய சீர்காழி கல்வி மாவட்டத் தலைவரும், பள்ளி தலைமை ஆசிரியருமான அறிவுடைநம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் காசி.இளங்கோவன் வரவேற்றார்.
சாரணர் இயக்க மாநிலத் தலைவரும், மெட்ரிக் பள்ளிகளின் முன்னாள் இயக்குநருமான ப.மணி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, சீர்காழி சாரண கல்வி மாவட்ட இணைய தளத்தை தொடங்கிவைத்து, 30 ஆண்டுகளுக்கு மேல் சாரண இயக்கத்தில் பணிபுரிந்த ஆசிரியர்கள் 8 பேருக்கு பாராட்டுத் தெரிவித்தார். உதவி தலைமை ஆசிரியர்கள் சம்பந்தம், சம்பத்குமார், வரதராஜன் உள்ளிட்டோர் வாழ்த்துரையாற்றினார். சாரண இயக்க மாவட்டப் பொருளாளர் நா.அசோக்குமார் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com