கோ-கோ விளையாட்டில் அரசுப் பள்ளி மாணவர்கள் சாதனை

பொறையாறு அருகேயுள்ள தில்லையாடி தியாகி வள்ளியம்மை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கோ-கோ போட்டியில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர். 

பொறையாறு அருகேயுள்ள தில்லையாடி தியாகி வள்ளியம்மை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கோ-கோ போட்டியில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர். 
மயிலாடுதுறை கல்வி மாவட்ட அளவில் அண்மையில் நடைபெற்ற 17 வயதுக்குள்பட்ட ஆடவர்களுக்கான கோ-கோ போட்டியில் தில்லையாடி தியாகி வள்ளியம்மை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதலிடம் பெற்றனர் . இவர்கள் சீர்காழி நெப்பத்தூர் ரெத்தனம் சுழல்கோப்பையையும், தொடர்ந்து 20 ஆண்டுகளாக பெற்று வருகின்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை, பயிற்சியளித்த முன்னாள் உடற்கல்வி ஆசிரியர்கள் பிரபாகர், பாலாஜி, சத்தியராஜ் மற்றும் பள்ளித் தலைமையாசிரியர் தாமு உள்ளிட்டோர்
பாராட்டினர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com