பொறையாறு அருகேயுள்ள தில்லையாடி தியாகி வள்ளியம்மை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கோ-கோ போட்டியில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
மயிலாடுதுறை கல்வி மாவட்ட அளவில் அண்மையில் நடைபெற்ற 17 வயதுக்குள்பட்ட ஆடவர்களுக்கான கோ-கோ போட்டியில் தில்லையாடி தியாகி வள்ளியம்மை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதலிடம் பெற்றனர் . இவர்கள் சீர்காழி நெப்பத்தூர் ரெத்தனம் சுழல்கோப்பையையும், தொடர்ந்து 20 ஆண்டுகளாக பெற்று வருகின்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை, பயிற்சியளித்த முன்னாள் உடற்கல்வி ஆசிரியர்கள் பிரபாகர், பாலாஜி, சத்தியராஜ் மற்றும் பள்ளித் தலைமையாசிரியர் தாமு உள்ளிட்டோர்
பாராட்டினர்.