திருவாவடுதுறை ஆதீனத்தில் வியாழக்கிழமை விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றது.
விழாவில், கிரிவலம் வந்த நல்லூர் நம்பியாரூரர் சிவனடியார் திருக்கூட்டம் தயாரித்து அளித்த சிவஞானக்களிறு எனும் விழா மலரை திருவாவடுதுறை ஆதீன 24-ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசார்ய சுவாமிகள் வெளியிட, அதன் முதல் பிரதியை கிரிவலம் வந்த நல்லூர் இசக்கிராஜ் பெற்று கொண்டார்.
தொடர்ந்து, ஆதீனப் பணியாளர்களின் குழந்தைகள் 100 பேருக்கு தலா ரூ. 2 ஆயிரம் வீதம் ரூ. 2 லட்சம் கல்வி ஊக்கத்தொகை மற்றும் பிரசாதம் வழங்கினார். இதில், ஆதீன கல்வி நிலைய ஆசிரியர்கள் மற்றும் சைவ சித்தாந்த பேராசிரியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.