யோகா, கராத்தே பயிற்சி தொடக்கம்

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் யோகா மற்றும் கராத்தே பயிற்சி வகுப்புகள் வியாழக்கிழமை தொடங்கின.

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் யோகா மற்றும் கராத்தே பயிற்சி வகுப்புகள் வியாழக்கிழமை தொடங்கின.
வேதாரண்யம் கீழவீதி முனீஸ்வரன் கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ஓய்வுபெற்ற ஓவிய ஆசிரியர் ஜானகிராமன் தலைமை வகித்தார். 
வள்ளலார் தர்மச்சாலை நிர்வாகி தமிழ்த்தூதன் முன்னிலை வகித்தார். தமிழ் மாநில சித்த மருத்துவக் கழகத்தின் கொள்கைப் பரப்புச் செயலாளர் தேவூர் க.கோ. மாணிக்கவாசகம் பயிற்சி வகுப்பைத் தொடங்கி வைத்தார்.
கேரள வைத்தியர் ஜாய், கெம்ளாஸ்ட் நிறுவனர் நாகராஜன் மற்றும் சமூக ஆர்வலர்கள் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com