வேதாரண்யம் பகுதியில் செப்டம்பர் 15 மின்தடை

நாகை மாவட்டம், வேதாரண்யம் மற்றும் திருவாரூர் மாவட்டம் ஆலங்காடு பகுதியில், பராமரிப்பு பணி காரணமாக

நாகை மாவட்டம், வேதாரண்யம் மற்றும் திருவாரூர் மாவட்டம் ஆலங்காடு பகுதியில், பராமரிப்பு பணி காரணமாக சனிக்கிழமை (செப். 15) மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின் வேதாரண்யம் உதவி செயற்பொறியாளர் வி. அண்ணாதுரை விடுத்த செய்திக் குறிப்பு: வேதாரண்யத்தை அடுத்த வாய்மேடு துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் சனிக்கிழமை மேற்கொள்ளப்படவுள்ளன. இதனால், வாய்மேடு துணைமின் நிலையத்தில் இருந்து மின்சாரம் விநியோகிக்கப்படும் வாய்மேடு, ஆயக்காரன்புலம் உள்ளிட்ட வேதாரண்யம் பகுதியிலும், திருவாரூர் மாவட்டம், ஆலங்காடு பகுதியிலும் காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com