அரசு உதவிபெறும் பள்ளி நிர்வாகிகள் கூட்டம்

நாகை மாவட்டம், வேதாரண்யம் ஒன்றியத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளின்


நாகை மாவட்டம், வேதாரண்யம் ஒன்றியத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளின் நிர்வாகிகள் சங்கக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
சங்க மாவட்டச் செயலாளர் பி.ஆர். கிரிதரன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் ஆர். சின்னச்சாமி, கே. பக்தவச்சலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன்படி, சங்கத்தின் வட்டாரத் தலைவராக ஆயக்காரன்புலம் நாடிமுத்து தொடக்கப் பள்ளியின் செயலாளர் அ. மதியரசு, செயலாளராக குருதெஷ்ணாமூர்த்தி பள்ளி செயலாளர் ஜி. ராசேந்திரன், பொருளாளராக அண்டர்காடு பள்ளி செயலாளர் ஆறுமுகம், துணை நிர்வாகிகளாக தோத்தாக்குடி எஸ். ராமமூர்த்தி, அண்ணாப்பேட்டை எம். செந்தில்நாதன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com