நாகை, மீன்வளப் பொறியியல் கல்லூரியில், பொறியாளர் தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் சி. பாலசுப்பிரமணியன் தலைமை வகித்து, விழாவைத் தொடங்கி வைத்தார். அப்போது, பொறியியல் மாணவர்கள் மனித நலனுக்காக, இயற்கை வளங்களை உகந்த முறையில் மாற்ற விஞ்ஞானத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும் என்றார் அவர். பொறியியல் துறைத் தலைவர் கு. ரத்னகுமார், வாழ்வியலில் பொறியியலின் தேவைகளை விளக்கிப் பேசினார்.
இதைத் தொடர்ந்து, கட்டுரை போட்டி, பேச்சு போட்டி மற்றும் சுவரொட்டி விளக்கக்காட்சிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.