விவசாயிகள் சந்திப்பு கூட்டம்

நாகை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள அண்ணன்பெருமாள்கோயிலில் பாரதிய கிசான் சங்கம் சார்பில், விவசாயிகள் சந்திப்பு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நாகை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள அண்ணன்பெருமாள்கோயிலில் பாரதிய கிசான் சங்கம் சார்பில், விவசாயிகள் சந்திப்பு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு ஓய்வுபெற்ற ஆசிரியர் கண்ணன் தலைமை வகித்தார். அமைப்பின் மாவட்ட துணைத் தலைவர் திருஞானம், மாவட்டச் செயலாளர் சிவகுமார், ஒன்றியச் செயலாளர் குழந்தைவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவசாயி நடராஜன் வரவேற்றார்.
அகில இந்திய பாரதிய கிசான் சங்கப் பொதுச் செயலாளர் மோகன்மிஸ்ரா கலந்துகொண்டு பேசுகையில், தஞ்சை, நாகை மாவட்டங்கள் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டால், விவசாயிகளுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.
இதுகுறித்து விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்பட்டு வருவது மகிழ்ச்சியளிக்கிறது என்றார். இதில், திரளான விவசாயிகள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com