நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்
/

விவசாயிகளுக்கு கூட்டுப்பண்ணைத் திட்டம் குறித்து பயிற்சி

திருமருகல் ஒன்றியம் மேலப்பூதனூர் ஊராட்சியில் விவசாயிகளுக்கு வேளாண் துறை மூலம் கூட்டுப்

Updated On :24 ஜனவரி 2019, 2:53 am IST

திருமருகல் ஒன்றியம் மேலப்பூதனூர் ஊராட்சியில் விவசாயிகளுக்கு வேளாண் துறை மூலம் கூட்டுப் பண்ணைத் திட்டம் குறித்து செவ்வாய்க்கிழமை பயிற்சியளிக்கப்பட்டது. 
பயிற்சிக்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சிவக்குமார் தலைமை வகித்தார். வேளாண்மை அலுவலர் ரமேஷ் முன்னிலை வகித்தார். நாகை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரும், துணை வேளாண்மை உதவி இயக்குநருமான கிருஷ்ணப்பிள்ளை கலந்து கொண்டு கூட்டுப்பண்ணைத் திட்டம் குறித்து பேசினார். 
இதில், சீயாத்தமங்கை, மேலப்பூதனூர்,கீழப்பூதனூர், கீழத்தஞ்சாவூர், திருப்பயத்தங்குடி,கொங்கராயநல்லூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த கூட்டுப் பண்ணைத் திட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 
இதில், வேளாண் துணை அலுவலர் ரவிச்சந்திரன், உதவி வேளாண்மை அலுவலர்கள் ஜெயராமன், பிரிட்டோஜான்சன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.