மேற்கு வங்கம்: ஃபால்டா மறுதேர்தலில் பாஜக அமோக வெற்றி! பேரவையில் பாஜகவின் பலம் 208-ஆக உயர்வு! போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதில் முதல்வர் விஜய் தீவிரம்: அமைச்சா் கே.தென்னரசுவாராந்திர ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்புத்விஷா சர்மா மரண வழக்கு: இரண்டாவது முறை உடற்கூராய்வுக்குப் பின் உடல் தகனம்!பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ்; பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் வெளியேறின!நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை: கேஜரிவால் வலியுறுத்தல்! அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி!
/

விவசாயிகளுக்கு கூட்டுப்பண்ணைத் திட்டம் குறித்து பயிற்சி

திருமருகல் ஒன்றியம் மேலப்பூதனூர் ஊராட்சியில் விவசாயிகளுக்கு வேளாண் துறை மூலம் கூட்டுப்

Updated On :24 ஜனவரி 2019, 2:53 am IST

திருமருகல் ஒன்றியம் மேலப்பூதனூர் ஊராட்சியில் விவசாயிகளுக்கு வேளாண் துறை மூலம் கூட்டுப் பண்ணைத் திட்டம் குறித்து செவ்வாய்க்கிழமை பயிற்சியளிக்கப்பட்டது. 
பயிற்சிக்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சிவக்குமார் தலைமை வகித்தார். வேளாண்மை அலுவலர் ரமேஷ் முன்னிலை வகித்தார். நாகை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரும், துணை வேளாண்மை உதவி இயக்குநருமான கிருஷ்ணப்பிள்ளை கலந்து கொண்டு கூட்டுப்பண்ணைத் திட்டம் குறித்து பேசினார். 
இதில், சீயாத்தமங்கை, மேலப்பூதனூர்,கீழப்பூதனூர், கீழத்தஞ்சாவூர், திருப்பயத்தங்குடி,கொங்கராயநல்லூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த கூட்டுப் பண்ணைத் திட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 
இதில், வேளாண் துணை அலுவலர் ரவிச்சந்திரன், உதவி வேளாண்மை அலுவலர்கள் ஜெயராமன், பிரிட்டோஜான்சன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.