தூய்மை இந்தியா உறுதிமொழி ஏற்பு
By DIN | Published On : 04th April 2019 07:11 AM | Last Updated : 04th April 2019 07:11 AM | அ+அ அ- |

திருக்குவளை அரசு வட்ட தலைமை மருத்துவமனையில் தூய்மை இந்தியா உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுறுத்தலின்பேரில், அனைத்து மருத்துவமனைகளிலும் தூய்மை இந்தியா உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அந்த வகையில், திருக்குவளை அரசு வட்ட தலைமை மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மருத்துவ அலுவலர்கள் என். அன்புச்செல்வம் மற்றும் ஆர். ராகிணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். செவிலியக் கண்காணிப்பாளர்கள், செவிலியர்கள், மருந்தாளர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.