நாராயணப் பெருமாள் கோயிலில் பிரமோத்ஸவம் தொடக்கம்

சீர்காழியை அடுத்த திருநாங்கூர் நாராயணப் பெருமாள் கோயிலில் கொடியேற்றத்துடன் பிரமோத்ஸவம் வியாழக்கிழமை தொடங்கியது.

சீர்காழியை அடுத்த திருநாங்கூர் நாராயணப் பெருமாள் கோயிலில் கொடியேற்றத்துடன் பிரமோத்ஸவம் வியாழக்கிழமை தொடங்கியது.
இதையொட்டி நாராயணப் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், சாற்றுமுறை, தீபாராதனை ஆகியன நடைபெற்றன. தொடர்ந்து, பெருமாள் கொடிமரம் அருகே எழுந்தருளினார். கொடிமரத்துக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, உத்ஸவ கொடியான கருடக் கொடியேற்றப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர், நாராயணப் பெருமாள் வீதியுலா புறப்பாடு நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com