நாகை சிபிசிஎல் ஒப்பந்தத் தொழிலாளர்கள், குடும்ப அட்டைகளை ஒப்படைக்கும் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 16) ஈடுபடத்
திட்டமிட்டுள்ளனர்.
நாகை சிபிசிஎல் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களின் பணிப் பாதுகாப்புக்கு, சிபிசிஎல் நிர்வாகம் எழுத்துப்பூர்வமான உறுதியை அளிக்க வலியுறுத்தி, வரும் மக்களவைத் தேர்தலைப் புறக்கணிக்க உள்ளதாக சிபிசிஎல் ஒப்பந்தத் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
இதே கோரிக்கையை வலியுறுத்தி, சிபிசிஎல் ஒப்பந்தத் தொழிலாளர்கள் வரும் 16-ஆம் தேதி தங்கள் குடும்ப அட்டைகளை நாகை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக சிபிசிஎல் ஒப்பந்தத் தொழிலாளர்கள் நலச் சங்கம் தெரிவித்துள்ளது.