ஓட்டு வேட்டை...

நாகை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ம. சரவணனனை ஆதரித்து, அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளான

நாகை மக்களவைத் தொகுதி
நாகை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ம. சரவணனனை ஆதரித்து, அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளான பாஜக, பாமக, தேமுதிக, தமிழ் மாநில காங்கிரஸ், புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் வலிவலம் பகுதியில் வாக்குச் சேகரித்தனர்.  அப்போது, அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறிய நூறு நாள் வேலைத் திட்டத்தை இரு நூறு நாள்களாக உயர்த்தப்படும், கோதாவரி ஆற்றை காவிரியில் இணைப்பது, விவசாய அமைப்புக்கு தனி மன்றம் அமைப்பது, நீர்ப்பாசன ஆறுகளில் தனி தடுப்பணைக் கட்டி  நீராதாரத்தை பெருக்குவது உள்ளிட்ட வாக்குறுதிகளை முன்னிறுத்தி வீடுவீடாகச் சென்று இரட்டை இலை சின்னத்துக்கு வாக்குச் 
சேகரித்தனர். வாக்குச் சேகரிப்பை அதிமுக பொருப்பாளர் ராஜேந்திரன் தொடங்கி வைத்தார். இதில், அதிமுக ஊராட்சிச் செயலர் பி. பழனிவேலன், கிளைச் செயலர்  எம். ராஜ்குமார்  உள்ளிட்டோர் சுமார் 650 பேர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com