அதிமுக பிரமுகரிடம் ரூ.18 ஆயிரம் பறிமுதல்

கீழ்வேளூர் அருகே ஆவணங்களின்றி அதிமுக பிரமுகர் வைத்திருந்த ரூ.18 ஆயிரத்தை தேர்தல் பறக்கும் படையினர் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர்.


கீழ்வேளூர் அருகே ஆவணங்களின்றி அதிமுக பிரமுகர் வைத்திருந்த ரூ.18 ஆயிரத்தை தேர்தல் பறக்கும் படையினர் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர்.
கீழ்வேளூரை அடுத்த ஆவராணி புதுச்சேரி கிராமத்தில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்கப்படுவதாக தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்து. இதையடுத்து, நாகை துணை வட்டாட்சியர் கிரிஜா தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர், அங்கு சென்று சோதனை செய்தனர்.
 அப்போது, கீழத்தெருவைச் சேர்ந்த அதிமுக ஊராட்சி செயலாளர் மு. மணி (52) என்பவர் ஆவணங்களின்றி ரூ.18 ஆயிரம் வைத்திருந்தது கண்டறியப்பட்டது. அதைப் பறிமுதல் செய்த பறக்கும் படையினர், பணத்தை கீழ்வேளூர் வட்டாட்சியர் கபிலன் வசம் ஒப்படைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com