குத்தாலம் அருகே அரையபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சீதளாம்பிகை கோயிலில், 22-ஆம் ஆண்டு தீமிதி திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஏப்ரல் 14-ஆம் தேதி தொடங்கிய இவ்விழாவில், பால்குடம், காவடி, கரகம், பூச்சொரிதல், மஞ்சள் காப்பு, அம்பாள் வீதியுலா, கஞ்சி வார்த்தல், காளியம்மன் அபிஷேகம் ஆகியன நடைபெற்றன. முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதை முன்னிட்டு, காப்புக் கட்டிய நூற்றுக்கணக்கான பக்தர்கள் வீதியுலாவாக கோயிலுக்கு வந்து தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடனைச் செலுத்தினர். இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.