நாகை அருகே முள்புதரில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் தீயில் கருகிய நிலையில் கிடந்தது புதன்கிழமை தெரியவந்தது.
வடக்கு பொய்கைநல்லூர், கல்லாறு அருகே உள்ள முள்புதரில் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் சடலம், தீயில் கருகிய நிலையில் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து, போலீஸார் அங்கு சென்று சடலத்தைக் கைப்பற்றி, நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, நாகை நகர போலீஸார் வழக்குப் பதிந்து, அவர் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.