நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியத்தில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் சூறைக்காற்றில் சேதம் அடைந்ததால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
திருமருகல் ஒன்றியத்தில் ஆழ்துளைக் கிணறு மூலம் 7 ஆயிரம் ஹெக்டேரில் விவசாயிகள் குறுவை நெல் சாகுபடி செய்துள்ளனர்.
அதன்படி சீயாத்தமங்கை, திருமருகல், அம்பல், போலகம், குருவாடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நெற்பயிர்கள் வளர்ந்து, அறுவடைக்கு 15 நாள்கள் உள்ள நிலையில், கடந்த சில நாள்களாக வீசிய சூறைக்காற்றில் நெற்பயிர்கள் அனைத்தும் சாய்ந்து சேதம் அடைந்துள்ளன. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.