ஆடி 3-ஆவது வெள்ளியையொட்டி, சீர்காழி அருகே குமிளங்காடு பத்ரகாளியம்மன் கோயிலில் இந்து மக்கள் கட்சி சார்பில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
இதையொட்டி, பெண்கள் திருவிளக்கிற்கு மஞ்சள், குங்குமம், பூக்களால் அலங்கரித்து தலைவாழை இலையில் பச்சரிசி நிரப்பி, அதில் திருவிளக்கை வைத்து பூஜை செய்தனர். குங்குமத்தால் அர்ச்சனை செய்து பிறகு திருவிளக்கு போற்றி 108 நாமங்கள் சொல்லி மலர்களால் அர்ச்சனை செய்தனர். தொடர்ந்து, நைவேத்யம் படைத்து தீபாராதனை செய்யப்பட்டு, கூட்டு வழிபாடு நடத்தப்பட்டது.
இதில், இந்து மக்கள் கட்சியின் மாநிலச் செயலாளர் கொள்ளிடம் ஜெ.சுவாமிநாதன், மாவட்ட பொறுப்பாளர் மணிகண்டன், ஒன்றிய தலைவர் சொக்கலிங்கம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோமதி செய்திருந்தார்.