வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலில் திமுகவின் பொய்ப் பிரசாரம் எடுபடாது என தமிழக கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்தார்.
நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வருகை தந்த அவர், செய்தியாளர்களிடம் கூறியது:
காவிரி நதி நீர் பிரச்னையில் தமிழகத்துக்குரிய உரிமையை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளை அணு அளவும் காலதாமதமின்றி அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது. இதற்கு விரைவில் தீர்வு காணப்படும். வேலூர் மக்களவைத் தொகுதியில் திங்கள்கிழமை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மக்கள் தெளிவாக உள்ளனர். யாரும் மக்களை ஆசை வார்த்தைகளைக் கூறி ஏமாற்ற முடியாது.
நடைபெற்ற மக்களவை தேர்தலில், திமுக பொய்ப் பிரசாரங்களை செய்தது நிரூபணம் ஆகியிருக்கிறது. வேலூர் தேர்தலில் திமுகவின் பொய்ப் பிரசாரம் எடுபடாது என்றார் அவர்.