நாகூர் ஆற்றில் ஆண் சடலம்   

நாகூர் அருகே ஆற்றில் ஆண் சடலம் கிடந்தது திங்கள்கிழமை தெரியவந்தது.

நாகூர் அருகே ஆற்றில் ஆண் சடலம் கிடந்தது திங்கள்கிழமை தெரியவந்தது.
நாகூர் அருகே வெட்டாற்றில் ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக  நாகூர் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீஸார் அங்கு சென்று அடையாளம் தெரியாத 35 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலத்தை  மீட்டு, நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சடலமாக கிடந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. நீலநிற மேல் சட்டை, சாக்லேட் கலரில் அரைக்கால் சட்டை அணிருந்ததாக போலீஸார் தெரிவித்தனர். இதுகுறித்து, நாகூர் போலீஸார்  வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com