சீர்காழி அருகே புத்தூர் பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், சர்வதேச இளைஞர் தினம் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில் நடைபெற்ற இவ்விழாவில், கல்லூரியின் முதல்வர் (பொறுப்பு) மா. சாந்தி தலைமை வகித்து பேசினார். போட்டித் தேர்வுகள் பயிற்சியாளர் கவிதாசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்கள் தயாராகும் விதம் குறித்து
பேசினார்.
நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் சசிகுமார் வரவேற்றார். ஆங்கிலத் துறை உதவி பேராசிரியர் வினோத் நன்றி கூறினார்.