வேதாரண்யத்தை அடுத்த அருந்தவம்புலத்தில், மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அருந்தவம்புலம் கடைவீதியில் திங்கள்கிழமை நடைபெற்ற இக்கூட்டத்துக்கு இளம் சிறுத்தைகள் எழுச்சிப் பேரவை ஒன்றியச் செயலாளர் வீரை.விஜயன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் பாப்பா செல்வம், எம்.சி. கண்ணன், சந்திரசேகர், சரவணன், இளையராஜா, முருகையன், சந்திரமோகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.