சீர்காழி வட்டத்தில் விதைப்பந்து விதைக்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
பூமி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்தும் விதமாக ஸ்ரீ கிருஷ்ணா சமூக நல அறக்கட்டளை சார்பில் சீர்காழி, கொள்ளிடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காவிரி கரையில் விதைப்பந்து விதைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அறக்கட்டளைத் தலைவர் ஜி. ரமேஷ் தலைமை வகித்தார். காவிரி ஆற்றங்கரையோரம் மருது, வாகை, பூவரசு உள்ளிட்ட பல்வேறு மரவிதைகள் விதைக்கப்பட்டன. நிகழ்ச்சியில் கிராமமக்கள் பங்கேற்றனர்.