நாகை நீலாயதாட்சியம்மன் உடனுறை காயாரோகண சுவாமி கோயில் வளாகத்தில், நேரு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் வியாழக்கிழமை தூய்மைப் பணிகளை செய்தனர்.
தேசிய பசுமைப்படை சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பள்ளியில் பயிலும் தேசிய பசுமைப்படை மற்றும் இளையோர் செஞ்சிலுவை சங்க மாணவர்கள் தூய்மைப் பணிகளை செய்தனர். கோயில், நிர்வாகம் மற்றும் பக்தர்கள் சார்பில் மாணவர்களுக்குப் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில், நாகை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ஞானசேகரன், தேசிய பசுமைப்படை நாகை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மா. முத்தமிழ் ஆனந்தன், நேரு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பள்ளி முதல்வர் சரஸ்வதி, பள்ளி துணை முதல்வர் எம். புவனேஷ்குமார், ஒருங்கிணைப்பாளர் கி. வீரமணி, கோயில் செயல் அலுவலர் எஸ். குடியரசு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.