குத்தாலம் அருகேயுள்ள திருவாவடுதுறை ஆதீனம் திருவாவடுதுறை ஸ்ரீ கோமுக்தீஸ்வரர் கோயிலில் புதன்கிழமை அசுவதி ஆவணி மாத ஆராதனை விழா நடைபெற்றது.
தமிழ்நாடு திருமூலர் திருமன்றம் மற்றும் மயிலாடுதுறை ஆன்மிகப் பேரவை சார்பில் நடைபெற்ற விழாவில், மகாலிங்க ஓதுவாமூர்த்தியின் திருமுறை பாராயணம் நடைபெற்றது. ஸ்ரீமத் அம்பலவாண தம்பிரான் சுவாமிகள் வரவேற்றார். கோயில் கண்காணிப்பாளர் சண்முகம் முன்னிலை வகித்தார். தொடர்ந்து, திருமூலர் ஜீவசமாதியில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அன்னம்பாலிப்பு செய்யப்பட்டது. திருமூலர், நந்திதேவர் உத்ஸவமூர்த்திகள் கோயிலை சுற்றி உலா வந்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.