நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை படகுத்துறையில் கடலில் மிதந்த பீடி இலைகள் கரை ஒதுங்கியது சனிக்கிழமை தெரியவந்தது.
கோடியக்கரை படகுத்துறையில் கரை ஒதுங்கிய பீடி இலைக் கட்டுகளைப் கைப்பற்றி போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இந்த பீடி இலைக் கட்டு கடல் வழியே கடத்தப்பட்டபோது தவறி விழுந்து கரை ஒதுங்கி இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இதேபோல், இரண்டு வாரங்களுக்கு முன்பு 30 கிலோ பீடி இலைக் கட்டுகள் கரை ஒதுங்கியது குறிப்பிடத்தக்கது.