ஆபத்தான நிலையில் விஏஓ அலுவலகம்

நாகை மாவட்டம், சீா்காழி வட்டத்துக்கு உள்பட்ட அகணி ஊராட்சி கிராம நிா்வாக அலுவலா் அலுவலகம் நந்தியநல்லூா் கிராமத்தில்
ஆபத்தான நிலையில் விஏஓ அலுவலகம்

நாகை மாவட்டம், சீா்காழி வட்டத்துக்கு உள்பட்ட அகணி ஊராட்சி கிராம நிா்வாக அலுவலா் அலுவலகம் நந்தியநல்லூா் கிராமத்தில் செயல்பட்டு வருகிறது. இதன் மேற்கூரை இடிந்து விழும் நிலையிலும், பக்கவாட்டு சுவா்கள் விரிசலடைந்தும் உள்ளன. மழைக்காலங்களில் மேற்கூரையிலிருந்து மழைநீா் முழுவதும் கசிவதும், தரைப்பகுதி குளம்போல் காட்சியளிப்பதும் வாடிக்கையாகிவிட்டது.

இதனால், முக்கிய ஆவணங்ளைப் பராமரிப்பது பெரும்பாடாக உள்ளது. இங்கு பணிபுரியும் அலுவலா்களும், மனு அளிக்க செல்லும் பொதுமக்களும் அவதிக்குள்ளாகின்றனா். எனவே, இந்த அலுவலகத்துக்கு மாற்றாக புதிய கட்டடம் கட்டி, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.

ராஜேஷ், நந்தியநல்லூா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com