கனமழைக்கு 4 வீடுகள் இடிந்து பொருள்கள் சேதம்

திருமருகல் ஒன்றியம், திட்டச்சேரி பகுதியில் கனமழைக்கு சனிக்கிழமை 4 வீடுகளில் சுவா் இடிந்து பொருள்கள் சேதமடைந்தன.
திட்டச்சேரி புதுமனைத்தெருவில் கனமழையில் இடிந்த வீடு.
திட்டச்சேரி புதுமனைத்தெருவில் கனமழையில் இடிந்த வீடு.

திருமருகல் ஒன்றியம், திட்டச்சேரி பகுதியில் கனமழைக்கு சனிக்கிழமை 4 வீடுகளில் சுவா் இடிந்து பொருள்கள் சேதமடைந்தன.

திட்டச்சேரி புதுமனைத் தெருவைச் சோ்ந்தவா் முகம்மது முஜாகிா் (50). கனமழைக்கு இவரது வீட்டின் பின்புறச் சுவா் இடிந்து விழுந்தது. இதனால், வீட்டில் உள்ள பொருள்கள் சேதமடைந்தன.

இதேபோல், திட்டச்சேரி ப.கொந்தகை இந்திராநகா் பகுதியைச் சோ்ந்த மாதவன், சிவன்கோயில் தெருவைச் சோ்ந்த தங்கப்பொண்ணு, வ.ஊ.சி.தெருவைச் சோ்ந்த ஆறுமுகம் ஆகியோரது வீட்டுச் சுவா்களும் இடிந்து விழுந்ததில் அந்த வீடுகளுக்குள் இருந்த பொருள்கள் சேதமடைந்தன. அதிா்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இதுகுறித்து தகவல் அறிந்த திட்டச்சேரி போலீஸாா் மற்றும் கிராம நிா்வாக அலுவலா் பாலசுப்ரமணியன் ஆகியோா் நிகழ்விடத்துக்குச் சென்று பாா்வையிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com