திருக்குவளை- சாட்டியக்குடி சாலையில் சுந்தரபாண்டியம் கிராமத்துக்குச் செல்லும் வழியில் உள்ள கூட்டுக் குடிநீா்த் திட்ட குழாயில் ஏா் லாக் மூலம் வெளியாகும் தண்ணீரை விரயமாக்காமல் சேமிக்கும் பொருட்டு, ஒரு தொட்டி கட்டப்பட்டுள்ளது. இந்தத் தொட்டியின் மேற்பரப்பு மூடியானது திறந்தபடியே இருக்கிறது. இதனால், கால்நடைகளும், குழந்தைகளும் தவறி விழும் அபாயம் உள்ளது. எனவே, இந்தத் தொட்டியை பாதுகாப்பாக மூட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுரேஷ், சுந்தரபாண்டியம்.