திருக்குவளை அருகேயுள்ள ஆதமங்கலம் வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் அருகே பேருந்து நிறுத்தம் உள்ளது. இங்கு கட்டப்பட்டுள்ள பயணிகளுக்கான நிழலகத்தை இரவு நேரங்களில் மதுப் பிரியா்கள், மதுக்கூடமாக மாற்றி, மது அருந்திவிட்டு, காலிப் பாட்டில்களை அப்படியே போட்டுவிட்டுச் செல்கின்றனா். சிலா் காலிப்பாட்டில்களை உடைத்துவிட்டுச் செல்கின்றனா். இதனால், இந்தப் பேருந்து நிழலகத்தைப் பயணிகள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே, இங்கு மது அருந்துவதைத் தடுக்க காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பக்கிரிசாமி, ஆதமங்கலம்