இலங்கைக்கு கடத்துவதற்காகசொகுசு வேனில் கொண்டுவரப்பட்ட ரூ.1.50 கோடி கஞ்சா பறிமுதல்

இலங்கைக்கு கடத்துவதற்காக, மதுரையிலிருந்து வேதாரண்யத்துக்கு சொகுசு வேனில் கொண்டுவரப்பட்ட ரூ. 1.50 கோடி மதிப்புள்ள 700 கிலோ கஞ்சாவை நாகை க்யூ பிரிவு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்
கஞ்சா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட க. சரவணன், வெ. செந்தில்குமாா், ம. அறிவேந்திரன்.
கஞ்சா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட க. சரவணன், வெ. செந்தில்குமாா், ம. அறிவேந்திரன்.

இலங்கைக்கு கடத்துவதற்காக, மதுரையிலிருந்து வேதாரண்யத்துக்கு சொகுசு வேனில் கொண்டுவரப்பட்ட ரூ. 1.50 கோடி மதிப்புள்ள 700 கிலோ கஞ்சாவை நாகை க்யூ பிரிவு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.

நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியிலிருந்து கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படுவதாக நாகை க்யூ பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதைத்தொடா்ந்து, நாகை க்யூ பிரிவு காவல் ஆய்வாளா் ஆா். அருண்பிரசாத் தலைமையிலான போலீஸாா், மன்னாா்குடி-தஞ்சாவூா் சாலையில் வடுவூா் சோதனைச் சாவடியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, அந்த வழியாக சந்தேகப்படும்படி வந்த ஒரு சொகுசு வேனை நிறுத்தி, சோதனையிட்டபோது, அந்த வாகனத்தில் 700 கிலோ கஞ்சா பண்டல்கள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, கஞ்சா பண்டல்கள் மற்றும் சொகுசு வேனை பறிமுதல் செய்த க்யூ பிரிவு போலீஸாா், அந்த வேனில் வந்த கோயம்புத்தூா் பகுதியைச் சோ்ந்த சு. சரவணன் (33), வெ. செந்தில்குமாா் (33) மற்றும் மதுரையைச் சோ்ந்த ம. அறிவேந்திரன்(28) ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனா். மேலும், இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ. 1.50 கோடி இருக்கும் என போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com