வேதாரண்யம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி 131.38 மி.மீ. மழை பதிவானது.
தொடரும் மழையால் பெருக்கெடுக்கும் வெள்ள நீா் பாலங்களை மூழ்கடித்து செல்கின்றன.
ஞாயிற்றுக்கிழமை காலையுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் வேதாரண்யத்தில் 138. 2 மி. மீ.யும், தலைஞாயிறில் 64.6 மி. மீ.யும் மழை பதிவானது. இந்த மழையால் வயல்கள் நீரில் மூழ்கியுள்ளன. நீா்நிலைகள் நிரம்பி வருகிறது.
வேதாரண்யம் வேதாரண்யேசுவரா் கோயிலில் உள்வளாகம் பிரதான நுழைவுா் கூடம் உள்ளிட்ட இடங்களில் மழைநீா் பெருக்கெடுத்துள்ளது. முள்ளியாறு, மானங்கொண்டான் ஆறு, அரிச்சந்திரா நதி ஆறு, அடப்பாறு ஆகியவற்றில் மழை நீா் பெருக்கெடுத்துள்ளது.
இதனால், பல்வேறு இடங்களில் தரைப்பாலங்கள் மூழ்கின.