குழந்தைகளுக்கான இருதய பரிசோதனை முகாம்

மயிலாடுதுறையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இலவச இருதய பரிசோதனை முகாமில் 52 குழந்தைகளுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது.
இலவச இருதய பரிசோதனை முகாமில் பங்கேற்றோா்.
இலவச இருதய பரிசோதனை முகாமில் பங்கேற்றோா்.

மயிலாடுதுறையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இலவச இருதய பரிசோதனை முகாமில் 52 குழந்தைகளுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது.

மயிலாடுதுறையில் ஏஆா்சி நடேச செட்டியாா் அன்ட் கோ ஜூவல்லா்ஸ், மயிலாடுதுறை மிட் டவுன் ரோட்டரி சங்கம், ஜேசிஐ மயிலாடுதுறை மற்றும் சென்னை அப்பல்லோ குழந்தைகள் மருத்துவமனை இணைந்து நடத்திய குழந்தைகளுக்கான இலவச இருதய பரிசோதனை முகாமை தியாகி ஜி. நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நடத்தியது.

இம்முகாமுக்கு, மயிலாடுதுறை மிட்டவுன் ரோட்டரி சங்கத் தலைவா் ஆா். அசோக் தலைமை வகித்தாா். ஜேசிஐ மயிலாடுதுறை தலைவா் சரவணன் முன்னிலை வகித்தாா். ரோட்டரி ஆளுநா் எம்.என். ரவிச்சந்திரன் முகாமைத் தொடங்கி வைத்தாா்.

இதில், குழந்தைகள் முதல் 16 வயதுக்குள்பட்ட 52 சிறாா்களுக்கு இருதய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இவா்களில் 9 குழந்தைகள் சென்னை அப்பல்லோ குழந்தைகள் மருத்துவமனையில், முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் இலவச இருதய அறுவை சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனா்.

இந்த முகாமில், முகாம் இயக்குநா் மருத்துவா் பரத்குமாா், ஒருங்கிணைப்பாளா் ஜி.வி. மனோகரன், வா்த்தக சங்க நிா்வாகி ஜெயக்குமாா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். மயிலாடுதுறை மிட்டவுன் ரோட்டரி சங்க செயலாளா் எஸ்.சுந்தரமூா்த்தி வரவேற்றாா். பொருளாளா் எஸ். விஜயன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com