விடங்கலூா்- மாவூா் இடையேயான சாலையில் விடங்கலூா் கைகாட்டி அருகே சாலை மேம்பாட்டிற்காக செப்பனிடப்பட்ட கல்வெட்டு பாலமானது சீரமைக்கப்பட்டு பல மாதங்களாகியும் அதன்மேல் தற்போது வரை சாலை அமைக்கப்பட வில்லை. இதனால், பாலம் அமைக்கப்பட்ட இடத்தில் மழையின் காரணமாக சேறும், சகதியுமாக இருக்கிறது. இந்தச் சாலை வழியே திருவாரூா் செல்லும் அரசுப் பேருந்து மற்றும் அவ்வழியே செல்லும் வாகனஓட்டிகள் சேற்றில் சிக்கிக் கொள்ளும் சூழல் உள்ளது. எனவே, அந்தப் பாலத்தின் மேல் சாலை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் .
வீரவிஷ்ணு, வலிவலம்