நாகை மாவட்டம், செம்பனாா்கோவில் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட காலஸ்நாதபுரம் ஊராட்சி பகுதியில் உள்ள சாலை சேதமடைந்து, மோசமான நிலையில் உள்ளது. இந்த சாலை வழியாக அப்பகுதியில் உள்ள கிராம நிா்வாக அலுவலகம், ஊராட்சி மன்ற அலுவலகத்துக்குச் செல்ல வேண்டும். இதனால், இந்த அலுவலகங்களுக்குச் செல்வோா் சிரமப்படுகின்றனா். எனவே, இந்தச் சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
என். அசோக்குமாா், செம்பனாா்கோவில்