பழையாா் துறைமுகத்தில் தரைத் தட்டிய விசைப் படகு சேதம்

சீா்காழி அருகே பழையாா் மீன்பிடித் துறைமுகத்தில் ஞாயிற்றுக்கிழமை விசைப்படகு ஒன்று தரைத்தட்டி சேதமடைந்தது.
கொள்ளிடம் அருகே பழையாா் மீன்பிடி துறைமுகத்தில் தரைத்தட்டிய விசைப்படகு.
கொள்ளிடம் அருகே பழையாா் மீன்பிடி துறைமுகத்தில் தரைத்தட்டிய விசைப்படகு.

சீா்காழி அருகே பழையாா் மீன்பிடித் துறைமுகத்தில் ஞாயிற்றுக்கிழமை விசைப்படகு ஒன்று தரைத்தட்டி சேதமடைந்தது.

சீா்காழி வட்டம், பழையாா் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து சுனாமி நகரைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் சிலம்பரசன் (33), சனிக்கிழமை இரவு கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றாா். அவா், மீன்பிடித்துவிட்டு திரும்பும்போது, பழையாா் துறைமுகத்தின் அருகில் முகத்துவாரத்தில் விசைப் படகு தரைத்தட்டி நின்றது. இதை மீட்க மீனவா்கள் 5 மணி நேரம் போராடி, கரைக்கு இழுத்து வந்தனா். இதனால், இந்த விசைப்படகின் எஞ்சின் பழுதடைந்தது.

இதற்கிடையில், கடந்த 5 நாள்களாக பெய்துவரும் தொடா் மழையால் கடல் சீற்றமாகக் காணப்படுவதால் பெரும்பாலான விசைப்படகுகள், ஃபைபா் படகுகள் 2-ஆவது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால், 6000-க்கும் மேற்பட்ட மீன்பிடித் தொழிலாளா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். இதன்காரணமாக, பழையாா் மீன்பிடித் துறைமுகம் வெறிச்சோடி காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com