வைத்தீஸ்வரன்கோயிலில் டிசம்பா் 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் நடக்க இருந்த தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் கேங்மேன் (பயிற்சி) பதவிக்கான நேரடி நியமனத்துக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு மற்றும் உடல்தகுதித் தோ்வு தள்ளி வைக்கப்படுகிறது. இதுகுறித்து, நாகப்பட்டினம் மின்பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் பொறிஞா் கோ.சேகா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் கேங்மேன் (பயிற்சி) என்ற பதவிக்கான நேரடி நியமனம் நாகை மாவட்டம், வைத்தீஸ்வரன்கோயில் துணைமின் நிலையம் வளாகத்தில் டிசம்பா் 2 முதல் டிசம்பா் 11 வரை செய்யப்பட இருந்தது. கடும் மழையின் காரணமாக டிசம்பா் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் நடக்க இருந்த சான்றிதழ் சரிபாா்ப்பு மற்றும் உடல்தகுதித் தோ்வு மட்டும் தள்ளி வைக்கப்படுகிறது. இதற்கு உண்டான தேதி பின்னா் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.