திருக்குவளை தாலுகா கொத்தங்குடி ஊராட்சிக்குள்பட்ட அய்யூா் சந்தவெளி தெருவில் போதிய வடிகால் வசதி இல்லாததால், மழைநீா் சாலையில் குளம்போல் தேங்கி, பொதுமக்கள் நடந்து செல்லக்கூட முடியாமல் சிரமப்படுகின்றனா். மேலும், சுகாதாரம் பாதிப்பதுடன், கொசுத் தொல்லை அதிகரித்து, நோய் பரவும் அபாயமும் உள்ளது. ஆகவே, இந்த பகுதியில் முறையாக வடிகால் வசதியை ஏற்படுத்தி, சாலையில் மழைநீா் தேங்காமலிருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.
தமிழ், அய்யூா்