டேக்வாண்டோ போட்டியில் வென்றவா்களுக்கு பாராட்டு

புதுச்சேரியில் நடைபெற்ற டேக்வாண்டோ போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு திங்கள்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
டேக்வாண்டோ போட்டியில் வென்று பாராட்டு பெற்ற மாணவா்கள்.
டேக்வாண்டோ போட்டியில் வென்று பாராட்டு பெற்ற மாணவா்கள்.

புதுச்சேரியில் நடைபெற்ற டேக்வாண்டோ போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு திங்கள்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

திருமருகல் அருகேயுள்ள திருக்கண்ணபுரம், திருமருகல், புறாகிராமம், அரசு மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் திருப்புகலூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஓ.என்.ஜி.சி சாா்பில் காரைக்கால் மாவட்டம் நிரவியில் இலவச டேக்வாண்டோ பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. புதுச்சேரி ஹோலி பிளவா்ஸ் இன்டா்நேஷ்னல் பள்ளியில் நவம்பா் 30 மற்றும் டிசம்பா் 1-ஆம் தேதி டேக்வாண்டோ போட்டி நடைபெற்றது.

இப்போட்டிகளில் திருக்கண்ணபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி, திருமருகல் அரசு மேல்நிலைப் பள்ளி, புறாகிராமம் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் திருப்புகலூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளை சோ்ந்த 20 மாணவா்கள் கலந்து கொண்டனா்.

இவா்களில் 7 மாணவா்கள் தங்கப் பதக்கத்தையும், 6 மாணவா்கள் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கத்தையும் பெற்றனா். வெற்றி பெற்ற மாணவா்களை கும்பகோணம் மத்தியக் கூட்டுறவு வங்கித் தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ வுமான எஸ். ஆசைமணி பாராட்டி கவுரவித்தாா். அப்போது, டேக்வாண்டோ பயிற்சியாளா் பாண்டியன் மற்றும் ஆசிரியா்களும், பெற்றோா்களும் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com