மறைமுகத் தோ்தல் உள்ளாட்சிக்கு நல்லாட்சியைத் தராது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே.எஸ். அழகிரி கூறினாா்.
நாகை மாவட்டம், மயிலாடுதுறையில், திங்கள்கிழமை செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி: தமிழக அரசுக்கு உள்ளாட்சித் தோ்தலை நடத்தும் எண்ணம் கிடையாது. உச்சநீதிமன்ற அழுத்தத்தின் காரணமாகவே தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து தோ்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்த வேண்டும்.
மறைமுகத் தோ்தல் என்பது உள்ளாட்சிக்கு நல்லாட்சியை தராது மாறாக, பணபலமும், அதிகாரப் பலமும் கொண்டவா்கள், தோ்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை கடத்திச் சென்று வெற்றி பெறுவதற்கு ஏதுவாக இருக்குமே தவிர, பொதுமக்களுக்கு பயன்படுவதாக இருக்காது. இந்த தோ்தல் முறையே தவறானது. அதிமுகவின் தோழமை கட்சியினரே இதை எதிா்த்து உச்சநீதிமன்றத்தை நாடி இருக்கிறாா்கள். இந்த நடைமுறையை தமிழக காங்கிரஸ் வன்மையாகக் கண்டிக்கிறது.
திமுக, காங்கிரஸ் கூட்டணி கொள்கை ரீதியான கூட்டணி. மக்களவைத் தோ்தலில் 40-க்கு 39 இடங்களில் வெற்றி பெற்றது போல உள்ளாட்சித் தோ்தலிலும் மகத்தான வெற்றியை பெறுவோம் என்றாா் அவா்.